Saturday, November 28, 2009

Happy 10000+!!!

The journey of Lakshmi started with the first kilometer on a memorable day.

And today, it crossed the benchmark of 10,000 kms with just one hiccup and the journey still continues...




And I am the proud owner of this greatest companion...


10000+ kms in just 287 days (41 weeks)...

Memories to recollect:
  • It was rest for almost 30 days in workshop because of ...
  • Trip to Mahabs, Tirumala, Puducherry and so...
  • ECR ride ('n' number of times)...
  • An accident with a minor injury...
  • Did not pay bribe to any cops till now...

Hip... Hip... Hurray!
Hip... Hip... Hurray!!
Hip... Hip... Hurray!!!


HAPPY 10000+!!!


Dated on:

28th November 2009

Sunday, October 4, 2009

முற்பகல் செய்யின் - ஒரு நிமிடக் கதை

இடம்: ஜனாவின் இல்லம்
நேரம்: காலை 7:30 மணி
சூழல்: அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் இருந்த ஜனாவிடம், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கிளம்பும் ஜனாவின் மகன் மனோஜ் தன்னுடைய ரேங்க் கார்டினை (Rank Card) நீட்டுகிறான்...

ஜனா - பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்து இலக்க மாத சம்பளம் வாங்கும் 40 வயதான‌ அப்பா...
மனோஜ் - அதிகம் பணம் வசூலிக்கும் புகழ் பெற்ற தனியார் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவன்...

மனோஜ் : Dad! You've to sign this report card... [Matriculation ஸ்கூல் ஆச்சே... கொடுக்கிற காசுக்கு இந்த இங்கிலீஷ் கூட இல்லனா... ]

ஜனா:
See Manoj! You are studying in 10th standard now... உன்னோட படிப்புல ரொம்ப முக்கியமான வருஷம்... இப்படி maths paperல fail ஆயிட்டே இருந்தால் நீ ஆசைப்பட்ற group கிடைக்காது... ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கனும்...


மனோஜ்:நான் நல்லா தான் படிக்கிறேன் daddy. இருந்தாலும் maths ரொம்பவே கஷ்டமா இருக்கு...

ஜனா: You have to study more... Don't miss special classes...


மனோஜ்: But dad, wats the use of having algebra in 10th standard itself? ஒரு நாள் கூட நீங்க geometry, graph எல்லாம் use பண்ணி நான் பார்த்தது இல்லை... நான் +1ல காமர்ஸ் (commerce) group எடுக்கனும்னா, இப்போ எதுக்கு மரம், செடி, bacteria, virus பத்தி தெரிஞ்சுக்கனும்? அப்புறம் எதுக்கு இதெல்லாம்?

[எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாத ஜனா, சிறிது நேர மொளனதிற்கு பிறகு...]


ஜனா: Its our education system which we follow. நானும் இந்த methodல தான் படிச்சேன்... You can do it...
ரொம்ப நேரம் படி... சத்தமா படி...

[தன்னுடைய‌ எந்த கேள்விகளுக்கும் பதில் வரவில்லையே என்ற குழப்பத்துடன்...]

மனோஜ்: Okay Dad! I will try my best...

ஜனா: காலையில சீக்கீரம் எழுந்து படி... Avoid watching tv and playing cricket... அடுத்த தடவையும் நீ fail ஆனால், நான் sign பண்ண மாட்டேன்...

மனோஜ் : !@#$!
[
Mind Voice:- இப்போ தான் புரியுது ஏன் ராகேஷ் மாதிரி நிறைய பேர்classroomலயே அவன் அப்பாவோட‌ கையெழுத்து போட்டுக்கிட்டானு...]

ஜனா: எதிர்த்த வீட்டு பாலு Government schoolல படிச்சாலும் class first வரான்... Compare yourself with him...

[அறிவுரை கூறிக்கொண்டே ஜனா என்ற தன் இரண்டு எழுத்தினை ஒரு வரிக்கு கிறுக்கலாக எழுதினார்]

மனோஜ் : [Mind Voice:- அப்பாட... ஒரு வழியா sign போட்டாச்சு... இன்னும் நாலு தெரு பசங்க கூட‌ compare பண்ணி அரை மணி நேரம் நிக்க வச்சிடுவாரோனு பயந்துட்டேன்... அவ்வ்வ்வ்...]



இடம்: CCS அலுவலகம்
நேரம்: மதியம் 2:30 மணி
சூழல்: இந்த வருடத்திற்கான certification exam முடிக்காததால் பதவி உயர்வினை தவற விட்ட ஜனா, தன் மேலாளரிடம் விவாதம் செய்கிறார்...


ஜனா - சில பல வருடங்களாகவே டீம் லீடர் பதவியில் வேலை செய்யும் மென்பொருள் வல்லுநன்...
ரகு - ஜனாவின் மேனேஜர்...


ஜனா: Raghu... Actually, I should get role change this year. என்னோட வேலைக்கு சேர்ந்த நிறைய பேரு
promotion வாங்கிட்டாங்க‌...

ரகு: Relaxxxxxx Jana... You are right... இது தான், உங்க‌ளோட careerல ரொம்ப முக்கியமான வருஷம்... But, நீங்க இந்த வருஷம் முடிக்க வேண்டிய ரெண்டு certificationsல‌, ஒன்னு தான் clear பண்ணி இருக்கீங்க‌...


ஜனா: You know that, I am handling a very critical project. செய்ய வேண்டிய வேலை செய்யறதுக்கே extra time spend பண்ண வேண்டியிருக்கு. Then how can I?

ரகு: May be... But, மத்தவங்க clear பண்றாங்களே...


ஜனா: Thats true, Raghu... அவங்க எந்த projectலயும் இல்லாமல், BENCHல இருந்திருக்கலாம்... Else, they might be in maintainace or testing project. But, its not my case... எனக்கு .NETல training கிடைச்சது... Java projectல ரொம்ப‌ வருஷமா work பண்றேன்... Mainframes technologyல certifications எழுதனும்னா, wats the use of it?

[எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாத ரகு, சிறிது நேர மொளனதிற்கு பிறகு...]

ரகு: This is our company policy. We should follow it. You should work hard... Put extra effort... You can do it...

[தன்னுடைய‌ எந்த கேள்விகளுக்கும் பதில் வரவில்லையே என்ற குழப்பத்துடன்...]

ஜனா: Thanks Raghu... I will try...


ரகு: நம்ம டீம்ல புதுசா வந்த கார்த்திக் எப்படி perform பண்றான் பாருங்க‌... Freshers are your competitors... Compare yourself with them... அவங்களோட compare பண்ணி தான் உங்களுக்கு rating கொடுப்போம்...

ஜனா: !@#$!
[Mind Voice:- இப்போ தான் புரியுது ம‌கேஷ் மாதிரி நிறைய பேர் ஏன் 2 years complete பண்ணதும் வேற வேற கம்பனிக்கு மாறி போகறாங்கனு...]

ரகு: I hope you are clear now. Any more clarifications?

ஜனா:
No Raghu. I am clear now. Thank you.
[Mind Voice:- பேச விட்டால் நீ 10 மணி cab கிளம்பர வரைக்கும் பேசுவ... நான் இப்போ கிளம்பனும்... போதும்டா சாமி... அவ்வ்வ்வ்...]

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்...

பி.கு.: இது எனது 50வது பதிப்பு
பிற ஒரு நிமிட கதைகள்: http://muthumalla.blogspot.com/search/label/1%20min%20story

Sunday, August 30, 2009

தேடல் தொடங்கியதே... - 22

இதுவரை...

Episode – 22
8:30 AM. Office Canteen, Mannar & Co.



"ஹே கல்பி!... நான் கேண்டீன்ல தான் இருக்கேன்... இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"
"வந்துகிட்டே இருக்கேன்டா... 3 minutesல, அங்க இருப்போம்..."


"இருப்போமா??? என்னடி சொல்ற?"
"ம்ம்ம்ம்ம்... என் friend கூட வரேன்..."


"friend-ஆ? எனக்கு தெரியாம, அப்படி பெருசா யாரும் இவளுக்கு இல்லையே... எட்டு மாசமா என் முகத்துல தானே முழிக்கிறா...திடீர்னு எங்க இருந்து முளைச்சது இந்த புது friendship? ஏதாவது ஒரு பையனா தான் இருக்கும்... இவளுக்கு தான் பொண்ணுங்க கூட பேசணும்னாலே அலர்ஜி ஆச்சே... ஹ்ம்ம்ம்... பார்க்கலாம்..." என்று நான் வழக்கத்துக்கு மாறாக யோசித்து கொண்டிருந்த பொழுது, எனது பின்புறமாக வந்தனர் இருவரும்...


அது தான் எங்களது முதல் சந்திப்பு... பார்க்க அழகா, அம்சமா, லட்சணமா, சாத்விகமா இருந்தாள்... "நம்ம ஆபீஸ்ல இப்படி ஒரு ஃபிகரா? அதுவும் கல்பனாவிற்கு தோழியா?" என்று வியந்தேன்...


"Hi da... She is Mythili... புதுசா என் டீம்ல join பண்ணி இருக்கிறாள்..." என வாழ்க்கையில் முதன்முதலாக உருப்படியான காரியம் செய்தாள் கல்பனா...


"Hey... I'm Muthu..."
"Hai... My name is Mythili..." என்றாள் மைதிலி நெளிவுடன்...


"Mannar & co. join பண்ணி எத்தனை மாசம் ஆகுது?"
"Just 3 months..."


"Ohh... Fresher-a?"
"Hmmm... Yes... நீங்க இப்போ என்ன போஸ்ட்ல இருக்கீங்க?"


"நான் Senior Software Engineerஆ இருக்கேன்... எனக்கு கீழே 50 பேர் வேலை செய்யராங்க..."


அதுவரை அமைதியாக இருந்த கல்பனா, திடீரென என்னை பார்த்து ஒரு லுக் விட்டாள்...


"Hey கல்பி... Cool... Cool... நான் first floorல இருக்கேன்... Ground Floorல 50 பேர் இருக்காங்க... அவங்களை சொன்னேன்..." என்றேன் எதார்த்தமாக.



இந்த மாதிரி அல்லது இதை விட கொடூர மொக்கைகளை கேட்டு அலுத்து போன கல்பனா அமைதியாக இருக்க, அனைவரும் ஒருகனம் திரும்பி பார்க்கும்படி இடைவிடாது வாய்விட்டு சிரித்தாள், மைதிலி...


"எனக்கு இந்த மாதிரி humor-ஆ பேசினால், ரொம்ப புடிக்கும்..." என்றாள் சிரிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்தவாறு.
அதை கேட்டதும் எனக்கு ஒரு நிமிடம்
FLASH BACK thaan...


[“செம… Humor டா உனக்கு… அது தான் உன்கிட்ட எனக்கு பிடித்ததே”]

"இவளுக்கு யாரையும் இங்கே தெரியாதாம்... அதனால, இவளும் இனிமேல் நம்ம lunch gang தான். ok?"


"hmmm... Ok Ok..." என்றேன் ஆனந்தமாக.

பிறகு, அவ்வப்பொழுது நானும் மைதிலியும் சந்தித்து பேசினோம்... கல்பனாவுடனும் அவள் இல்லாமலும்...


"எந்த காலேஜ்ல படீச்சீங்க? எந்த ஸ்கூல்ல படீச்சீங்க? உங்க வீட்டில எத்தனை பேரு? உங்க சொந்த ஊரே சென்னை தானா? உங்க அக்கா என்ன பண்றாங்க? கல்யாணம் ஆயிடுச்சா? சொந்த வீடா? வாடகை வீடா? Girl friend இருக்கா?" என ஒரே நாளில் என் 23 வருட வாழ்க்கை புரட்ட வைத்தாள்...


"வாங்க, போங்கனு எல்லாம் சொல்ல வேண்டாம்... அப்புறம் நமக்குள்ள ஒரு நெருக்கம் இருக்காது" என்றேன்... [அது தான் நான் பண்ண தப்பு...]


வரிக்கு வரி, 'ங்க' சேர்த்து சொன்னவள், பின்னாளில், டா, நாயே, லூசு, கிறுக்கா என்று எங்களது நெருக்கம் கூட, என் தன்மானம் குறைந்தது...

6 மணிக்கு எழுந்து 'குட் மார்னிங்' சொல்வது முதல் நள்ளிரவு 2 மணிக்கு 'குட் நைட்' சொல்லும் வரை, பேசினோம்...


அடடா... அவளை பற்றி உங்களுக்கு சொல்ல மறந்துட்டேனே... அவள் பெயர் மைதிலி... சொந்த ஊர் திருச்சி... BHEL கம்பெனில அப்பா வேலை செய்யராரு... கை நிறைய லஞ்சம் வாங்குகிற அளவிற்கு, நல்ல பதவி... வீட்டில அம்மா மெகா சீரியல் பார்ப்பதையே கடமையாக வைத்து இருப்பவர்கள்... ஒரு தங்கை, பெயர் சுவாதி... 3rd year B.E. படிக்கிறாள்... (Note பண்ணி வச்சுக்குங்க.. பின்னாடி தேவைப்படலாம்... [:P])


பள்ளி, கல்லூரி என திருச்சியிலேயே தன் இளமையின் பாதியை கழித்தவள்... முதன் முறையாக Mannar & Co.வின் training attend பண்ணுவதற்காக மூன்று மாசம் மைசூரில் இருந்தாள்... இவளுக்கு மட்டும் சென்னையில் பணி நியமனம் கிடைக்க, மாற்றலானாள்... சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், ரங்கநாதன் தெரு என்று மட்டுமே தெரிந்து வைத்து இருந்தாள்...


ஒரு நாள், வியாழக்கிழமை...


"நாம நாளைக்கு மாயாஜால் போலாமாடி?..."
"மாயாஜாலா? அப்படினா?"


"காசு நிறைய வந்துடுச்சுனா, போயிட்டு கொட்டிட்டு வர இடத்துல இதுவும் ஒண்ணு..."
"புரியலயே..."


"Theatre, snowbowling, karting, hotelனு எல்லாமே ஒரே இடத்துல இருக்கும்..."
"அது எங்க இருக்கு?..."


"பாண்டிச்சேரில ரெண்டு பீர் அடிச்சவன், சென்னை வரத்துக்குள்ள இரண்டாவது தடவை மூச்சா போறதுக்கு இறங்குற இடம்..."
"ச்ச்சீ... இப்படியா example சொல்லுவ?..." என்றாள் முகம் சுலித்தபடி...


"அய்யயோ... ஒரு ஆர்வத்துல indecent-ஆ பேசிட்டனோ..." மனதினுள்...


"சரி... முதல் தடவை இறங்குற இடம் எது?" என்றாள் குழைந்து கொண்டே...
"க்ர்ர்... த்தூ... அது கல்பாக்கம்டி..."
என்றேன் சிரித்தவாறு...


"நாளைக்கு தான் ஆபீஸ் இருக்கேடா?..." என்றாள் அப்பாவியாக...
"
Fresherனு அடிக்கடி prove பண்ணாதடி... IT கம்பனில, வெள்ளிக்கிழமை வேலை இருக்குமேனு சொன்ன முதல் ஆள் நீயாக தான் இருப்ப..."


"சரி... நாளைக்கு போகலாம்..."



தொடரும்...


Disclaimer:
இதை அமுக்குங்க...

Monday, August 17, 2009

தாய்மொழி கூட தகராறு செய்யுதடி!

தங்கமே!
உன் நினைவுகள்
மனதினில் புகுந்ததும்
தாய்மொழி கூட
தகராறு செய்யுதடி...

***************************************************************

செம்பூவே!
நீ வேலை
செய்வதால் தானோ
கணிணி பட்டறைக்கும்
தொழில்நுட்ப பூங்கா
என்று பெயர் வந்ததோ?

Sunday, August 2, 2009

தேடல் தொடங்கியதே... - 21

இதுவரை...
Scene 7: Back to Pavilion, Anna Nagar, Chennai


Episode – 21

திங்கட்கிழமை, நங்கநல்லூரில் இருக்கிற Mannar & Co., ஆபீசில ரிபோர்ட் பண்ணனும்னு பெங்களூர் HR சொன்னாங்க...

எனக்கு கையும் ஓடல... காலும் ஓடல... எவ்வளவு பொறுப்பான வேலை... யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு... இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, நாம நம்ம ஏரியால ஹீரொ ஆயிடனும்னு நினைத்தேன்... அடிக்கடி பவர் கட் ஆகுது, நைட்ல கொசு தொல்லை தாங்க முடியல, கார்பரேஷன் தண்ணி சரியாவே வர மாட்டேங்குது... இவ்வாறு எனக்கு தெரிந்த பிரச்சனைகளை எல்லாம் வெள்ளை பேப்பர்ல எழுதி கொண்டு ரிபோர்ட் செய்ய காத்திருந்தேன்...

"Please meet and discuss with Mr. Venkatagiri, Project Manager. He will tell you, in detail about your technology and project. All the best!" என்றார் சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து, படித்து, பணியில் இருக்கும் HR பெண்மணி ஒருவர்...

"இவங்க எல்லாம் எப்பவுமே இங்கிலீஷ்ல தான் பேசுவாங்களா? இல்லனா... என்னை பார்த்தா மட்டும் என்னை வச்சி கத்துகிறாங்களா?" என முணுமுணுத்தேன்...

மானேஜர்னு சொன்னதும், மதன் பாப், மௌலி, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி போல,


  • சுமார் 55 வயசுல இருப்பாரு...
  • கேனைத்தனமா ஏதாவது சொல்லிட்டு இருப்பாரு...
  • 'அசத்த போவது யாரு'ல வர மாதிரி, ஒரே coat-ஐ ஒன்பது வருஷமானாலும் போட்டுக்கிட்டு இருப்பாரு...
  • அவருக்கு என்னை விட 3 வயது குறைவாக ஒரு அழகான மகள் இருக்கும்...
  • அந்த பெண் ஆபத்துல இருக்கும் பொழுது நான் காப்பாத்தனும்...
  • அவள் ரொம்ப திமிர் புடிச்சவளாக இருப்பாள்.. நான் தான் அவளது கொட்டத்தை அடக்கனும்...
  • அவரோட காலத்துக்கு அப்புறம், நான் தான் மானேஜர் போஸ்டிங்ல இருக்கனும்...
  • கம்பெனி நிர்வாகத்தை எடுத்து நல்ல படியா நடத்தனும், இன்னமும் எவ்வளவோ கடமைகள் இருக்கு...

என்று நினைத்துக் கொண்டே அவரின் அறை கதவினை தட்டினேன்... [அதிகமா தமிழ் சினிமா பார்த்ததின் தாக்கம் தான்...]

"May I come in Sir"
"Yea.. Come In..."


உள்ளே வந்து பார்த்தால், 30 வயசுல, சப்பாத்தி மாவு கலர்ல, உருவத்திற்கு பொருந்தாத தொந்தியுடன், குறுந்தாடி வச்சிக்கிட்டு, laptopல ஏதோ வீடியோ பார்த்துக்கிட்டு ஒரு ஆள்... நான் நுழைந்தவுடன் அவசர அவசரமாக pause செய்ய பட்டது... [என்ன வீடியோனு என்னை கேட்டால், எனக்கு எப்படி தெரியும்? [:P]]


"Good Morning Sir..."
"Good Morning... You are Muthu from Bangalore. Rite?"

"Yes Sir..."
"Ok.. I am Venkatagiri... You can call me as Venki... No more sir please.. Ok?"

"Ok Sir"
"@$!%*&"

அப்போ அவரு கொடுத்த கேவலமான reaction-ன பார்த்து இருக்கனும்... என்னமோ, அவங்க ஒட்டு மொத்த குடும்பதையே கேவலமா திட்டின மாதிரி ஒரு சலிப்பு...

"L.K.G முதல் காலேஜ் வரைக்கும், lab attender முதல் principal வரை எல்லாரையும் சார்னு தான் கூப்பிட்டு பழக்கம்... அது தான் மரியாதையான வார்த்தைனு நினைத்தேன்... இவன் கொடுக்கிற reaction-ன பார்த்தா அது கெட்ட வார்த்தையோ?" குழப்பத்துடன் நான்...

"Muthu... You are assigned for a J2EE project... Just go thru the training materials and be prepared yourself..."

"But Venki, I was trained in .net..."

"Ohhh.. Is it? then take 3 days to update yourself... Good Luck!!!"

வெறும் மூணு நாளா? இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு எந்த புதிய மொழியை படிக்கனும்னாலும், "30 நாட்களில் ..."னு தான் புத்தகம் பார்த்து இருக்கேன்... ஆனா, இவனுங்க மட்டும் வாய் கூசாம சொல்வது, மூணு நாளுக்குள்ள படி... முயற்சி செய்து படி... முரட்டுத்தனமா படி... முட்டி போட்டு படி... மூக்கை மூடிட்டு படி...

எப்படியோ... எதிர்பார்த்த மாதிரி சொந்த ஊருக்கு வந்தாச்சு. அம்மாவின் கைப்பக்குவத்தோட சாப்பாடு, அப்பாவின் அதட்டல், அக்காவின் அக்கறை என இனிதே தொடங்கியது...

அலுவலகத்தில் புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள், புதிய இடம்... தெரிந்த ஒரே முகம் கல்பனா தான்... அதனால 'சூ... சூ...' தவிர, வேற எங்க போனாலும் சேர்ந்தே தான் போவோம்...

அவளுக்கு அறிமுகமான நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைப்பாள்... அவ்வாறே நானும்... எங்கள் நட்பு வட்டம் பெருகியது... எட்டு மாதங்கள் உருண்டோடின...

கல்பனாவின் டீம்ல ஒரு புதுவரவு... புதுவரவு கல்பனாவின் டீம்க்கு மட்டும் இல்ல... எனக்கும் தான்... :)

தொடரும்...

Disclaimer: இதை அமுக்குங்க...

Thursday, July 30, 2009

எப்பொழுது புரிந்து கொள்வாயடி?

ப்பொழுது கேட்டது போல,
ப்பொழுதும் கேட்கிறேன்…
ப்பொழுது என்னை புரிந்து கொள்வாயடி?

Friday, July 10, 2009

என் உலகமே நீதானடி!

"ச்சீ! இப்போ தர முடியாது,
நம்மைதான் ஊரே பார்க்குது" என்றாய் வெட்கத்துடன்...

"எப்பொழுது புரிந்துக் கொள்வாயடி,
என் உலகமே நீதான் என?" என்றேன் முத்தத்துடன்...

Saturday, June 27, 2009

என் கண்ணில் நீர் வடிந்தால்...

நான் அழுதால் தான்
நீ சிரிப்பாய் எனில்
காத்திருக்கிறேன் - நாள் முழுவதும்
அழுது கொண்டே இருக்க...

Tuesday, June 23, 2009

தேடல் தொடங்கியதே... - 20

இதுவரை...

Episode – 20

அந்த இரண்டு நாட்களும் பரபரப்புடன் காணப்பட்டது ... பார்த்த இடமெங்கும், குழு புகைப்படங்களும்(Group Photos) கை குலுக்கல்களும் நடந்தன...


"Arey, Wherever you are, keep in touch man... All the best!" என்றனர் வட இந்திய மச்சான்கள், சாதாரணமாக...

"Dude... I really had a nice time with you... I will miss your fun da... Take care buddy..." என்றனர் சிணுங்களாக, பிற மாநில மச்சினிகள்/தோழிகள்...


பீலிங்ஸ் ஜாஸ்தியா கொடுக்கறாங்களே... காலேஜ்ல நீட்டின மாதிரி ஆட்டோகிராப் புக் ஏதாவது நீட்டிடுவாங்காளோ... அதை fillup பண்றத விட, மறுபடியும் firstல இருந்து training attend பண்ணிடலாம்... உலகத்துலயே கஷ்டமான வேலை, slam book/feedback/testimonial எழுதுவது தான்... அதுவும் அதிகம் தெரியாதவர்களை பற்றினா, escapeeeeeeeeeeeeeee [விவேக் ஸ்டைல்ல...]

Training daysன் கடைசி சனிக்கிழமை காயத்ரியுடன் கழித்தேன்... நிறையவே சுற்றினோம்... மொக்கையாக பேசினோம்... சிலநேரம் சிரித்தோம்... பலநேரம் ரசித்தோம்... கொஞ்சமாக மகிழ்ந்தோம்(!!!?)...

அடுத்தநாள் ஞாயிறு, தீப்த்திக்கான நாள்... கொஞ்சமாக சுற்றினோம்... கொஞ்சலாக பேசினோம்... ஆனந்தமாக சிரித்தோம்... அற்புதமாக ரசித்தோம்... நிறையவே மகிழ்ந்தோம்(!???)...

திங்கட்கிழமை காலை, மிகுந்த படபடப்புடன் அனைவரும் காத்திருந்தோம்... காயத்ரிக்கு பெங்களூரிலயே கிடைக்க வேண்டும் என ஆசை... [சென்னைக்கு போனால், தன் ஜம்பம் பலிக்காதே...] 11 மணியளவில், தேர்ச்சி பெற்ற அனைவரின் பெயரையும் எந்த ஊரில் போஸ்டிங் போன்ற விபரத்தையும் நோட்டீஸ் போர்டில் ஒட்டினர்...

அடித்துப்பிடித்து புதுப்படத்துக்கு பிளாக்ல டிக்கெட் வாங்கிற மாதிரியே, சுமார் 60 பேர், அந்த இடத்தை சூழ்ந்துகொண்டார்கள்... அவ்விடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நின்று, அந்த கூட்டத்தினை பார்த்து கிண்டல் அடித்து பேசிக் கொண்டிருந்தோம் நானும் தீப்த்தியும்...

அப்பொழுது, திடீரென தீப்த்தி,
"Hey machi... I wish, we should work togther in same place... I can 't go somewhere without you... If I didn't get the same location as yours, then I will quit my job and will search someother..."

"என்னாது இது... சின்ன புள்ள தனமால இருக்கு!" [வடிவேலு ஸ்டைல்ல...]

"இல்லடா... I am serious... என்கு ரொம்போ கஸ்டமா இருக்குது..."

"Hey... எனக்கு சென்னை கிடைக்கணும்னு ஆசையா இருக்கேன்... ஊரை விட்டு ஊரை வந்து... போதும்டா சாமி... இந்த ஊரும் இங்க இருக்கிற பொழப்பும்... Its too boring yaar..." என்றேன்...

அப்பொழுது அவளுக்கு தமிழ் புரிய தொடங்கிய நேரம்...

அவள் கண்ணில் மலமல என நீர் தேங்கியது... சுதாரித்துக்கொண்டு கண் 'மை'யினை சரி செய்வதை போல, கண்ணீரை துடைத்தாள்...

சற்று தொலைவில் இருந்தவர்கள், எங்கள் வெறித்து பார்க்க தொடங்கினர்...

"சத்தியமா நான் ஒண்ணும் பண்ணல மிஸ்... அவளோட பல்பம் தொலைந்து போயிடுச்சாம்... அதான் அழறா"

இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என் அருகில் நின்று ஒரு பெண் அழுதாள்... அதற்கு பிறகு தீப்த்தி தான்... அதனால் அன்று பயன்படுத்திய அதே வரிகள் வார்த்தையாய் வர துடித்தது...

கட்டுப்படுத்திக்கொண்டு, "சரி. வா... போயிட்டு நாமும் பார்த்துட்டு வரலாம்..." என்றேன்...

தீப்த்திக்கு பெங்களூரிலும் காயத்ரிக்கும் பார்த்தசாரதிக்கும் Puneவிலும் எனக்கும் கல்பனாவிற்கும் சென்னையில் போஸ்டிங்...

"அய்யா... ஜாலி..." என கத்திக்கொண்டே தீப்த்தியை பார்த்தேன்... தாரைத்தாரையாக கண்ணில் தண்ணீருடன்...

(தப்பான reaction கொடுத்துட்டனோ??? [:s])

"I will you miss da... I will miss you badly..." என்றாள் உணர்ச்சி பொங்க...

"ரொம்ப பொங்கறாளே... 'வசூல் ராஜா' கமல் மாதிரி, கட்டிப்புடி வைத்தியம் பண்ணிடலாமா?" என எண்ணினேன்...

"நாம எதார்த்தமா நல்லது பண்ண போயிட்டு, அவங்க பதார்த்தமா பஞ்சாயத்தை HR முன்னாடி கூட்டிட்டாங்கனா... அய்யோ... posting நேரத்துல இந்த ஏழரையே வேண்டாம்..." என மௌனம் காத்தேன்...

தான் வைத்திருந்த சுருக்கு பையிலிருந்து, ஒரு காகிதத்தை எடுத்தாள்...

"இத நீ பாக்கும் போது என் ஞாபகம் உன்கு வரனும்... வரும்... என்கிட்ட ரெண்டு copies இருக்குது... இது உன்கு..."

BGM: ஏதாவது ஒரு விக்ரமன் படத்துல இருந்து, ஏதாவது ஒரு BGM...(எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்...)

"அடப்பாவிங்களா.. கோலிவுட்ல தான் இந்த மசாலா வாசனை தாங்கலனா, பாலிவுட்லயும் இதே கொடுமை தானா?" என்று நினைத்து கொண்டு அமைதியாக வாங்கினேன்... அதை பார்த்த பொழுது ஒரு குட்டி பிளாஷ்பேக்...

நாங்கள் இருவரும் ஒருமுறை Forum சென்ற பொழுது, 3 நிமிடத்தில் கலர் போட்டோ என்பது போல, 30 நிமிடத்தில் பென்சிலால் வரையப்பபடும் என்பதை கண்டோம்... முப்பது நிமிடம் ஒரே இடத்துல உட்கார கஷ்டமாக தான் இருந்தது... ஆனால் தீப்த்தி என் மீது கை போட்டு இருந்ததால, முப்பது நிமிடம் மூன்று நிமிடமானது... எங்கள் இருவரையும் தத்ரூபமாக வரைந்தான் 100 ரூபாய் வாங்கிய அற்புத கலைஞன்...

பிளாஷ்பேக் முழுவதுமாக முடிவதற்குள், என்னை யாரோ இறுக்கி அணைத்த உணர்வு... தீப்த்தி தன் துக்கம் தாங்காமல், என்னை கட்டி அணைத்தாள்...

"அய்யயோ... இன்னும் posting order வாங்கவே இல்ல... அதுக்குள்ள, relieving order கொடுத்துடுவாங்காளோ... இவ வேற பீலிங்ஸ்ல அழுகிறாள்... என்ன பண்ணுவது" என யோசித்து, ஒரு வழியாக சமாளித்தேன்...


Scene – 7: Mannar & Co., நங்கநல்லூர், சென்னை
Episode – 21


புதியதாக கிடைத்த நட்பு வட்டாரம்...
எனக்கு கிடைத்த அருமையான(?!?) டேமேஜர்...
கல்பனாவும் நானும்...
சிங்கார சென்னையில் உலா...

விரைவில்...




Disclaimer: இதை அமுக்குங்க...

Tuesday, June 16, 2009

Know Your Chennai!!!

KYC is a series which was initiated and moderated by me in my office forum. It was a huge hit among my office mates and now I am planning to do it BIG!!!! Yes!!! KYC is open to Public now.

The pictures of the series posted in my office forum, can be found as Archive here (http://knowyourchennai.blogspot.com/). If you can identify the picture, you can post your answer in the comments section. More pictures are on their way into this blog so keep hitting this blog!!!

Pictures may be famous buildings, landmarks, busy junctions or famous auditoriums, halls, malls, hotels and so on!!!

So, All the Best and lets see how well you KYC!!!!!